ஆளும் கட்சியோடு மல்லுக்கட்டு: பிரேமலதா ஸ்பீக்கிங்

ஆவடி தொகுதியில் தேமுதிக சார்பில் செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நாம இதுவரைக்கும் ஆட்சிக்கு வரல. நாம கட்சி பதவிய தவிர, அரசாங்க பதவிய இதுவரை பார்க்கல. ஆனாலும், ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சரிசமமா மல்லுக்கட்டி வெற்றி வீரரா, நம்ம தொண்டருங்க இன்னிக்கு வரைக்கும் களத்துல நிக்குறாங்க. ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் தேமுதிகவுக்கு எங்கிருந்து பணம் வருது, எப்படி செலவும் செய்ய முடியுதுன்னு கேட்கிறாங்க. எங்களுக்கு மனம் இருக்கு. அதனால, பணம் தானாக வருது. இவ்வாறு பிரேமலதா பேசினார்.

Related Stories: