புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் பெண் ஒருவர் லஞ்சம் பெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை கீழராஜா வீதி அருகே உள்ள சாந்தநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் அவர் வாங்கியிருக்கிறார். இதை தொடர்ந்து, பிச்சைக்காரர்கள் அளித்த தகவலை வைத்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.