களக்காடு: இந்தியாவிலேயே, பெண்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர்; பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சி அதிமுக. பெண்களுக்கு 50%இட ஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் உள்ளிட்டவற்றை கொண்டுவந்தது அதிமுக அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இல்லை; தமிழகத்தில் தான் நடைமுறையில் உள்ளது.