ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் இணைய ஊடகங்களில் வரும் செய்திகளை முகநூலில் பார்க்கவும் பகிரவும் தடை

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் இணைய ஊடகங்களில் வரும் செய்திகளை முகநூலில் பார்க்கவும் பகிரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள செய்தி ஊடக பேரம்சட்டம் காரணமாக வசதிகளை நீக்கியுள்ளதாக முகநூல் விளக்கம் அளித்துள்ளது.முகநூலில் வரும் ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச இணையதள செய்திகளை படிக்க முடியாமல் அந்நாட்டு பயனர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஊடகங்கள் இணையதளத்தில் பதிவிடும் செய்திகளை முகநூலில் பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.முகநூலில் உள்ள ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம், சுகாதாரத்துறை பக்கங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: