ஆவடி: ஆவடி, சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சிவசங்கரன் (31). இவருக்கும், திருவள்ளூர் அருகே போளிவாக்கம், கோமதி நகரைச் சார்ந்த அனுபிரியா (27) என்பவருக்கும் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அனுப்பிரியா பொறியியல் பட்டதாரி. திருமணத்தின்போது, அனுபிரியாவுக்கு பெற்றோர் 150 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு இனோவா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சிவசங்கரன் மேலும் 100 சவரன் நகைகளும், ஒரு ஆடி காரும், 5ஏக்கர் நிலமும் வரதட்சணையாக வாங்கி வரும்படி மனைவி அனுபிரியாவை சித்ரவதை செய்துள்ளார். இதற்கு, அவரது பெற்றோர் வாசுதேவன், சரஸ்வதி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.