சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை வழங்கி, அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘பெண்கள் படிப்பறிவில் பின்தங்கியுள்ளனர். அவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரை பின்பற்றி அதற்கும் ஒரு படி மேலே சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.