புதுகை அருகே மஞ்சு விரட்டு மாடுகள் முட்டியதில் 2 பேர் பரிதாப பலி: 18 பேர் படுகாயம்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கல்லூர் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் மஞ்சுவிரட்டு திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. . இதில் வாகனத்தில் ஏற்றி வந்த காளைகளை மஞ்சுவிரட்டு திடலில் நீண்ட நேரம் காத்திருந்தும் அவிழ்க்க முடியாமல் போனதால் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட தொடங்கினர். இதனால் காளைகள் நாலாபுறமும் மிரண்டு ஓடின. அதனை பிடிக்க அப்பகுதி இளைஞர்கள் முயற்சி செய்தனர். இதில் ஒருசில காளைகள்  பிடிபட்ட நிலையில், பெரும்பாலான காளைகள் தப்பித்து கூட்டத்திற்குள் ஆங்காங்கு சிதறி ஓடின. அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 20 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அன்சாரி (27), ராசு(60) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிழிந்தனர். 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: