பழநி: பழநி கோயில் கும்பாபிஷேக பணியை விரைவுபடுத்த வேண்டுமென இந்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் மணிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரசுப்பிரமணி, இந்து முன்னனி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.