ஐதராபாத்: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்ரீராமச்சந்திரா இருதய மையத்தில் 75ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி உலகமே கவலைப்பட்டது என்று அவர் கூறினார். ஆனால் இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒட்டுமொத்த உலகிற்கே உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.