சூளகிரி, அத்திமுகத்தில் பீட்ருட் அறுவடை துவக்கம் கிலோ ரூ.25க்கு விற்பனை

சூளகிரி: சூளகிரி, அத்திமுகத்தில் பீட்ருட் அறுவடை துவங்கியுள்ள நிலையில், கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சூளகிரி பகுதியில் ஆங்கில காய்கறி வகைகள் சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல வருவாய் கிடைக்கிறது. சூளகிரி தாலுகாவுக்கு உட்பட்ட அத்திமுகம், பேரிகை, பி.எஸ்.திம்ம சந்திரம், காட்டு நாயக்கன்தொட்டி, கும்பளம், திண்ணூர், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பீட்ருட் அறுவடை நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்த பீட்ருட்டை தோட்டத்தில் குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். முதல்தரம் கிலோ ரூ.25 வரையும், 2ம் தரம் கிலோ ரூ.18க்கும் விலை போகிறது. வியாபாரிகள் தரம் பார்த்து மொத்தமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக சேலம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: