உடுமலை: உடுமலை பெரியார் நகர் பகுதியிலிருந்து பழனி ஆண்டவர் நகர் பகுதிக்கு செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.இந்த பாதையை ஜீவா நகர்,காந்தி புரம்,தாண்டவன்காடு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் சாக்கடைக்கழிவு நீர் தேங்குவதும் அதை மோட்டார் மூலம் அப்புறப்படுத்துவதும் நீண்ட நாட்களாக தொடர்கதையாக நடந்து வருகிறது.
இங்கு ஒரு நாள் சாக்கடை நீரை வெளியேற்றாவிட்டால் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி விடும்.இதனால் அவ்வப்போது பொதுமக்கள் கழிவுநீரில் இறங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடல் அரிப்பு மற்றும் பல்வேறு நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.எனவே இந்த பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.