பாட்னா: பீகார் மாநிலத்தில் காவல்துறையினர் யாராவது மது அருந்தினால் அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறி வீட்டில் மது வைத்திருந்தால் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது போன்ற கடும் தண்டனைகளை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தலைநகர் பாட்னாவில் காவல்துறை உயரதிகாரிகள் உடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.