234 தொகுதிக்கும் விருப்ப மனு தரலாம்: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக 234 தொகுதிக்கும், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற சட்டமன்ற தேர்தலிலும்,  கன்னியகுமாரி பாராளுமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியின் 30  தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இந்த தேர்தலில்  நின்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கை  உடையவர்கள் வருகிற 21ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.  தகுதியான நபர்களை பரிந்துரைக்கவும் செய்யலாம். வாய்ப்புள்ளவர்கள் ஆன்லைன்  மூலமாகவும், வாய்ப்பில்லாதவர்கள் தலைமை அலுவலத்தில் நேரடியாகவும் மனு  தாக்கல் செய்யலாம். ஒரு விருப்ப மனுவுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம். இது தேர்தல்  செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும், திருப்பி தரப்பட மாட்டாது.  இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: