கும்மிடிப்பூண்டி: ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி துணை வட்டாட்சியர் (பறக்கும் படை) சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் மணி உள்ளிட்டோர் எளாவூர் சோதனைச் சாவடியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை மடக்கியபோது டிரைவர் லாரியை நிறுத்தி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து வருவாய் துறையினர் அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. தொடர்ந்து அதில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.