திண்டுக்கல்: தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவிற்கு, திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க தலைவர் கிருபாகரன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில், வணிகர்கள் தகுந்த ஆவணங்களுடன் பணம் எடுத்து சென்றாலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டது. தேர்தலை காரணம் காட்டி கடும் நெருக்கடி கொடுத்தால் வணிகம் மிகவும் பாதிக்கப்படும். வணிகம் செய்பவர்கள் பொருட்கள் வாங்க, நிறுவனத்தின் லெட்டர் பேடில் எழுதி ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.