பேரணாம்பட்டு அடுத்த மசிகத்தில் பைப்லைன் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அடுத்த மசிகத்தில் பைப்லைன் உடைந்து சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் மதனப்பள்ளி  பம்ப்அவுஸ் மூலமாக பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மசிகம் பஸ் நிலையம் அருகே உள்ள மசிகம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள குடிநீர் பைப்லைன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. இதனால், மசிகம் பஸ் நிலையத்தில் இருந்து மதனப்பள்ளி ஆறு வரை தண்ணீர் வெள்ளமாக ஓடி வீணாகிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சேதமடைந்த குடிநீர் பைப்லைனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: