டெல்லி: ஜல்கான் மாவட்டத்தின் யவால் தாலுகாவில் உள்ள கிங்கான் கிராமம் அருகே நேற்று இரவு வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர். மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஏற்பட்ட லாரி விபத்து மிகவும் வருத்தத்ததை ஏற்படுத்தியது. மேலும் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல் என மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டார்.