மாதாபுரம்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதாபுரம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வேனில் பயணம் செய்த ஒரு குழந்தை, 5 பெண்கள் உளப்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.