காஞ்சிபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டத்தில் திமுக பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் தொடர் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. வரும் 23ம் தேதி காஞ்சிபுரம் நகரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 24ம் தேதி கருங்குழியில் தக்கோலம் ஜெயராமன், 25ம் தேதி வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் சேலம் சுஜாதா, 27ம் தேதி மதுராந்தகம்அடுத்த வையாவூரில் நாஞ்சில் சம்பத். 28ம் தேதி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கலைச்செல்வி ஜெகநாதன், மார்ச் 1ம் தேதி சாலவாக்கம் அடுத்த சாத்தனஞ்சேரியில் நாத்திகம் நாகராஜன், 2ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் கரூர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.