ஜெய்ப்பூர் : குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலகத்தில் பணி செய்துவிட்டு சென்ற ஜெய்ப்பூர் மேயர் டாக்டர் சவும்யா குர்ஜாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூர் நகர் நிகாம் (கிரேட்டர்) மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார் வியாழக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு தனது குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்பு இரவு வரை தொடர்ந்து பணியாற்றி உள்ளார்.தனது குழந்தையை பெற்றெடுக்கும் நிலையிலும் பல்வேறு பணிகளை இழுத்துப்போட்டு செய்துள்ளார் ஜெய்ப்பூர் மேயர் சவும்யா குர்ஜார்