சிபிஐ, வருமான வரித்துறையுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜ: காங். செயல் தலைவர் சாடல்

சேலம்: காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அடிக்கல் நாட்டி, 2 ஆண்டுகளான நிலையில், வெறும் காம்பவுண்ட் சுவரை மட்டும் கட்டியுள்ளனர்.  பாஜவின் லட்சணம் இதுதான்.மத்திய பாஜ, மாநில அதிமுக ஆட்சியில் சிறு, குறு தொழில் அழிந்து வருகிறது.

அதிமுக அமைச்சர்களின் ஊழல் பிடி இருப்பதால் தான், பாஜ இந்த அளவிற்கு ஆடுகிறது. அதிமுகவினரும் ஊழலில் இருந்து தப்பிக்க அவர்களுடன் கூட்டணி வைக்கின்றனர். சிபிஐ, வருமான வரித்துறை ஆகியோருடன் கூட்டணி வைத்தே  தேர்தலை பாஜ சந்திக்கிறது. தமிழகத்தில் அந்த கூட்டணி நிச்சயம் தோற்கும். மேற்கு மாவட்டங்களை தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்கு ராகுல் வருகிறார். அவரது பிரசாரம் திமுக கூட்டணிக்கு வலுவை சேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: