சென்னை: தேமுதிகவில் புதிய நிர்வாகிகளை விஜயகாந்த் நியமித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தேமுதிக பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளராக பேராசிரியர் ஜெகன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த சி.பாபு (எ) வெங்கடாசலம் விடுவிக்கப்படுகிறார். மாணவர் அணி துணை செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, மாணவர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த செல்வகுமார் விடுவிக்கப்படுகிறார். வர்த்தகர் அணி துணை செயலாளராக ஜெ.சண்முகசுந்தரம் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, வர்த்தகர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த ரவி விடுவிக்கப்படுகிறார்.