மடிக்கேரியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 வீடுகள் சேதம்

குடகு: மடிக்கேரியில் கூலி தொழிலாளிகள் தங்கியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 வீடுகள் தரைமட்டமானதுடன் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. குடகு மாவட்டம் மடிக்கேரி  போலீஸ் சரகத்திற்குட்பட்ட மூர்நாடு பகுதியில் காபி தோட்டத்தில் வேலை பார்த்து வரும் கூலி தொழிலாளர்கள் வசித்து வந்த லைன் வீடுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் மூன்று வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், அந்த வீடு முழுவதும் தீக்கிரையானது. இதையடுத்து, இந்த தீ அருகாமையில் இருந்த லைன் வீட்டிற்கும் பரவியது. அந்த வீடுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறியது. இதில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமானதுடன், வீட்டினுள் இருந்த டி.வி, மேஜை, நாற்காலி, பாட புத்தகம், ஆடைகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூலி தொழிலாளர்கள், அழுது புலம்ப தொடங்கினர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: