கடன் தள்ளுபடி செய்த ‘முதல்வர் ஓபிஎஸ்’: உளறிய அமைச்சர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேர்தல் பொதுகூட்டத்தில் பங்ேகற்றார். அப்போது பேசிய வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த நம்முடைய முதலமைச்சர், கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ்’ என்றார். அதாவது இபிஎஸ் என்று கூறுவதற்கு பதிலாக ஓபிஎஸ் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்புக்கு இணங்க நம்மை எல்லாம் சந்திப்பதற்காக கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ் என்று மீண்டும் மீண்டும் இரண்டு முறை இபிஎஸ் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவதற்கு பதிலாக ஓபிஎஸ் என்றே தவறுதலாக கூறினார். முதல்வரின் முன்னிலையில் அமைச்சர் தொடர்ந்து உளறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

Related Stories: