மைசூருவில் இரட்டை கொலை வழக்கில் மூன்று பேர் கைது: மற்றொருவருக்கு வலை

மைசூரு: இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேரை ேக.ஆர் போலீசார் கைது செய்தனர். மைசூரு அருகேயுள்ள கவுரிசங்கர் நகரை சேர்ந்தவர்கள் கிரண் (29), கிஷன் (29). இவர்கள் சம்பவத்தன்று மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து கே.ஆர் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திலீப், சுவாமி மற்றும் மது ஆகிய மூன்று பேரை கே.ஆர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும் குவெம்புநகர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரகு என்பவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ரகு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அவரின் போன் சிக்னலை வைத்து அவன் இருப்பிடத்தை கண்டறிய  கே.ஆர் இன்ஸ்பெக்டர் சினிவாஸ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: