சேலம்: அண்ணன்-தம்பி பிரச்சனை என்று கட்சிக்குள் பேசியதை திரித்து கூறுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான்.
இளவரசி, சசிகலா சொத்துக்கள் பறிமுதல் நீதிமன்ற உத்தரவுப்படிதானே தவிர, அரசுக்கும் சம்பந்தமில்லை என்றார்.