பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருபவர் மாணவி சோபியா. கொரோனா விடுமுறை நேரத்தில் மாணவி சோபியா ‘எனது பூமி’ என்ற தலைப்பில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்களை வரைந்துள்ளார். உலக நாடுகளின் தேசியக்கொடிகள், தேசத்தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள், இயற்கை காட்சிகள், விவசாயம், தமிழர் பண்பாடு தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.