தெலங்கானாவிலும் ‘ராஜன்ன ராஜ்யம்’ புதிய கட்சி தொடங்குகிறார் ஜெகன் மோகன் சகோதரி

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியை பிடிக்க மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், ஷர்மிளா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒருங்கிணைந்த ஆந்திராவில்  எனது தந்தையின் ‘ராஜன்ன ராஜ்யம்’ இருந்தது. தற்போது, எனது சகோதரர் ஜெகன் மோகனின் மூலம் ‘ராஜன்ன ராஜ்யம்’ நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலத்தில் அவ்வாறு இல்லை. இங்கும் ‘ராஜன்ன ராஜ்யம்’ அமைய  தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கப்படும்,’’ என அறிவித்தார்.

Related Stories: