பூந்தமல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா பெங்களூரில் இருந்து கார் மூலம் நேற்று முன்தினம் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர் சென்னை மாநகர போலீசின் தொடக்க எல்லையான பழஞ்சூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தார். அப்போது அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சசிகலாவின் வாகனம் உள்ளே நுழைந்ததால் பின் வந்த 10 வாகனங்கள் மட்டும் சென்னைக்கு வர அனு மதி அளித் தனர். சசிகலாவின் வாகனத்துடன் தொடர் ந்து முன்னும்பின்னும் வந்த கட்சி நிர்வாகிகள் வாகனங்கள் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.