சிக்கமகளூரு: மாவட்டம் முழுவதும் உள்ள 7,374 வழக்குகளில் தீர்வு காண வரும் மார்ச் 27ம் தேதி மெகா அதாலத் நடத்தப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபா கவுடா தெரிவித்தார். சிக்கமகளூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுபா கவுடா கூறுகையில், சிக்கமகளூரு மாவட்டம் முழுவதும் 7,374 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண வரும் மார்ச் 27ம் தேதி மெகா அதாலத் நடத்தப்படும்.