நொய்டா: நொய்டாவில் நிலத்தகராறில் நடந்த மோதலில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிரேட்டர் நொய்டா பதல்பூர் போலீஸ்நிலைய பகுதியில் கிர்தர்பூர் கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள ஒரு நிலம் தொடர்பாக இரு குழுவினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக போலீசிலும் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இருதரப்பினரையும் நேரில் ஆஜராகச்சொல்லி போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். ஆனாலும் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஒருதரப்பை சேர்ந்த தேவேந்திரா மற்றும் அவரது ஆதரவாளர்களை அமித் மற்றும் சலோக் என்பவர் தரப்பினர் தாக்கினர்.