தஞ்சை: தஞ்சை, தூத்துக்குடியில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையிலும் 2 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் இருந்த சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு முடிவு செய்தது.