அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘மு.க.ஸ்டாலின் தலைமை காலத்தின் தேவை’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொரட்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இந்தியா இன்று இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது. வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கேரளா கம்யூனிஸ்ட் அரசு சட்டமன்றத்தை கூட்ட கூறுகிறது. ஆனால், ஆளுநர் கூட்ட தேவையில்லை என்கிறார். கேரளாவே கொந்தளித்தது. கேரளாவில் சட்டமன்றம் கூடி வேளாண் மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். மேலும், ஜார்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய அரசுகளும் சட்ட மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். தமிழகத்தில் அதிமுக அரசு தீர்மானம் கூட கொண்டு வந்திருக்க வேண்டாம்.