திண்டுக்கல்: காதல் திருமணம் செய்து கைவிட்ட கணவரின் வீட்டின் முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா பி[போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம் பென்னகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டராஜா என்பவர் சென்னையை சேர்ந்த பிரியாவை 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் சாதியை காரணம் காட்டி மணிகண்டராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாக அவரது மனைவி பிரியா குற்றம் சாடியுள்ளார்.