வேலூர் : வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே நன்னடத்தை கைதிகள் நடத்தும் சிறை பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகே உள்ள கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனை நேற்று மர்ம ஆசாமிகள் திடீரென தீ வைத்தனர். இதில் மள, மளவென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியது. மேலும், கால்வாயில் அமைக்கப்பட்டு இருந்த கேபிள்கள் ஒயர்கள் தீயில் எரிந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.