பாலக்காடு அருகே கொடூரம்; 6 வயது மகன் கழுத்தறுத்து கொலை: 3 மாத கர்ப்பிணி தாய் கைது

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே 6 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற ெகாடூர கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே பூளக்காடு பகுதியை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி ஷாஹிதா (28). இவர்களுக்கு ஆமீல் (6) உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஷாஹிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல அனைவரும் வீட்டில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஷாஹிதா தனது மகன் ஆமீலை தூக்கத்திலேயே குளியலறைக்கு எடுத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று, பாலக்காடு காவல் நிலைய தொலைபேசி எண்ணை வாங்கி போலீசுக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆமிலின் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் வந்தபிறகுதான் குழந்தை ஆமீல் கொல்லப்பட்ட சம்பவம் தந்தை சுலைமானுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷாஹிதாவை கைது ெசய்தனர்.  மகனை தனக்கு பலியிடுமாறு கடவுளிடம் இருந்து கட்டளை வந்ததாகவும், அதனால்தான் மகன் ஆமீல் கழுத்தை அறுத்து கொன்றேன் எனவும் ஷாஹிதா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: