மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் (25), அவருடைய மனைவி சாமா (23) ஆகியோர், இ-டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாமா மட்டும் வெளியே வந்தார். அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, ‘‘நான் பயணத்தை ரத்து செய்து விட்டேன்,’’ என்று கூறினர். அவரது இ-டிக்கெட்டை பரிசோதித்தபோது, அதில் எந்த முத்திரையும் இல்லை. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.