வேலூர்:தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் கட்சிகளில் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக இரு கட்சிகளிலும் அதிகளவில் இணைந்துள்ளனர். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக அதிமுகவும், மத்தியில் பாஜக இருப்பதால் இந்த இரு கட்சிகளில் இணைந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் எண்ணி பல ரவுடிகள் அங்கு தாவினர். அவர்களுக்கும் கட்சி தலைமை பதவிகள் கொடுத்து அழகு பார்த்துள்ளது. இருப்பினும் அவர்கள் ரவுடிகளாக பார்த்து பழக்கப்பட்ட பொதுமக்கள் இன்று கரைவேட்டியுடன் வருவதால் அலறுகின்றனர். இன்னும் பேச்சு, நடை உடை என அனைத்தும் மாறாமல் இருப்பதால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அவர்களை கூட அழைத்து செல்ல அச்சம் அடைகின்றனர். இப்படியே இருந்தால் நாம் வளர முடியாது என்ற நிலைக்கு ரவுடிகளும் வந்துவிட்டனர். இதனால் தற்போது புதிய டெக்னிக்கில் இறங்கி உள்ளனர்.