மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய 2 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 70 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவை அந்த பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.