திருச்சி : திருச்சி மாவட்டத்தில 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தன. முதல்கட்டமாக டிசம்பர் 22ம் தேதி 570 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரமும் (கன்ட்ரோல் யூனிட்), 230 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரமும் (விவிபேட்), 26ம் தேதி 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் (இவிஎம்), 2,920 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியும், 4,330 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரமும் வந்தன. திருச்சி மாவட்டத்துக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை செய்யும் பணி (எப்எல்சி) டிசம்பர் 29ம் தேதி திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது. கலெக்டர் சிவராசு பணிகளை துவக்கி வைத்தார். தேர்தல் தாசில்தார் முத்துசாமி மேற்பார்வையில் 50 வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பெங்களூரு பெல் நிறுவனத்தை சேர்ந்த 14பொறியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.