சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 2ம் தேதி (நேற்று முன்தினம்) சென்னை, கலைவாணர் அரங்கில் கூடியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்ைத வரும் 5ம் தேதி வரை (வெள்ளி) நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் கவர்னர் உரையை புறக்கணித்த திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று 2வது நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வீ.சந்திரன், சு.சிவராஜ், மா.மீனாட்சி சுந்தரம், ஜி.பி.வெங்கிடு, இரா.அரிக்குமார், கே.சி.கருணாகரன், பா.மனோகரன், பி.வெற்றிவேல், லி.அய்யலுசாமி, பி.முகமது இஸ்மாயில், வி.தண்டாயுதபாணி, எஸ்.அக்னிராஜு, சொ.ந.பழனிசாமி, வி.சிவகாமி, ஏ.டி.செல்லச்சாமி, எஸ்.ஆர்.ராதா, எஸ்.மணி, கே.ஏ.மணி, டி.யசோதா, ப.வெ.தாமோதரன், இரா.சண்முகம், மு.பழனிவேலன் உள்ளிட்ட 22 பேர் மறைவிற்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வசித்தார்.