மங்களூரு: தென்கனரா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் அப்பக்கா சர்க்கிளில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இங்கு நர்சிங் படித்து வந்தனர். இந்நிலையில் ெகாரோனா தொற்று காரணமாக நர்சிங் கல்லூரி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊர் சென்றிருந்த நர்சிங் கல்லூரி மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு வந்தனர்.