டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே வேளாண் சட்ட விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநிலங்களவையில் நேற்று கடும் அமளி நடந்தது. இதனால், சில முறை ஒத்திவைக்கப்பட்டு பின், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார். பின்னர், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.