துமகூரு: மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கு கடைப்பிடித்து வருகிறார்கள். மேலும் தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள நாடகமாடி வருகின்றனர் என்று முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் குற்றம் சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அவரின் பதவிக்கு ஆட்டம் ஏற்படும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது அவரின் வாடிக்கையாகிவிட்டது. அதன்பிறகு சில நாட்களில் அது பற்றிய எந்த தகவலும் வெளியே வருவதில்லை. முதல்வர் எப்படியோ, அவரை போலவே அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும் உள்ளனர்.