மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் மண்ணில் புதைந்த, 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல் மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கிரேக்க நாட்டில் உள்ளது லெஸ்போஸ் (Lesbos) தீவு. இந்தத் தீவில் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததால் வனத்திலிருந்த மரங்களும் உயிரினங்களும் எரிமலை சாம்பலில் புதையுண்டன. இங்குள்ள 15 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பழங்கால புதையுண்ட காடு யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.