சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே 2 பேரை இரும்பு கம்பியால் அடித்து அவர்களது காரை உடைத்து சேதப்படுத்திய முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் (45), இவரது மனைவி ரமாபிரபா இருவரும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கந்தவேலின் மகன் பப்ஜி கேமுக்கு அடிமையாகி இதே தோட்டத்துப் பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தோட்டத்தில் பெயிண்டிங் வேலை செய்து வரும் ஸ்ரீ ஜெயன் (42) என்பவரும் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு கந்தவேல், ஸ்ரீ ஜெயன் இருவரும் காரில் இரும்பறை பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கள்ளிப்பாளையம் விவசாய தோட்டத்தின் கேட் அருகே வந்து காரை நிறுத்தியபோது, திடீரென முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர் தங்களின் கைகளில் வைத்திருந்த இரும்பு கம்பிகளால், காரின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.