சாத்தான்குளம்: செட்டிவிளையில் அங்கன்வாடி மைய மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்குட்பட்ட செட்டிவிளையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40க்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் கட்டிடம் பழுதானதால் பெற்றோர்கள் அங்கன்வாடியை புதுப்பிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.8.70 லட்சத்தில் கடந்த 2019ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனோ ஊரடங்கு காரணமாக குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை. குழந்தைகளுக்கு தேவையான ஊட்டசத்து, உணவுகள் அவர்கள் வீடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.