திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என கூறினார்.
திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை தாங்கினார். செங்கை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் எம்.தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாராக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய அரசுப்பள்ளிகளை சேர்ந்த 5704 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.