தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா: 6 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 54,043 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,38,340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 523 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,21,430 பேர் குணமடைந்துள்ளனர். 4,554 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துமனையில் 2 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,356 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: