போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு

சென்னை, செப். 26: எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள சிவாலயா அடுக்குமாடி கட்டிடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பா சென்டரில் போலீசார் சோதனைக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த இளம்பெண் விசாரணைக்கு பயந்து பின்பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இதில் கீழே விழுந்ததில் கை, கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

The post போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: